24 மணித்தியாலங்களில் 36 பேர் சிக்கினர்!
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று காலை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 256 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, மேல் மாகாணத்துக்கு உள்நுழையும் மற்றும் வெளியேறும் 13 இடங்களில்
நேற்று மேற்கொள்ளப்பட் சோதனை நடவடிக்கையின்போது தனிமைப்படுத்தல்
சட்டவிதிமுறகைளை மீறி 206 வாகனங்களில் பயணித்த 430 பேர் திருப்பி
அனுப்பப்பட்டுள்ளனர்.