பிரம்படி படுகொலையின் 35 ஆவது நினைவேந்தல் நிகழ்வு(Video)
யாழ்ப்பாணம் கொக்குவில்-பிரம்படி படுகொலையின் 35 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று(12.10.2022) நடைபெற்றுள்ளது.
இந்த படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்களாலும், அப்பகுதி மக்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நினைவேந்தல் நிகழ்வில் பலரும் கலந்துகொண்டு உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.
பிரம்படி படுகொலை
1987 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு வந்திறங்கிய இந்திய படையினர் பல்வேறு படுகொலைகளை அரங்கேற்றியிருந்தனர்.
இந்த படுகொலைகளில் முதலாவதாக 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி மற்றும் 12 ஆம் திகதிகளில் கொக்குவில் பிரம்படியில் 50 மேற்பட்ட பொது மக்கள் துப்பாக்கியால் சுட்டும், கவச வாகனம் கொண்டு வீதியில் போட்டு நசித்தும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அமைதி படையாக வந்த இந்திய இராணுவம்
அமைதி படையாக வந்த இந்திய இராணுவத்தின் முதலாவது தமிழ் இனப் படுகொலை சம்பவமாக பிரம்படி படுகொலை பதிவாகியிருந்தது.
இந்நிலையில் பிரம்படி சந்தியில் உயிரிழந்தவர்களின் நினைவாக சிறிய நினைவு
தூபியும் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த நினைவுத்தூபியிலையே இன்றைய தினம் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.



