நெடுங்கேணியில் 78 கிலோ போதைப் கேரள கஞ்சாவுடன் இளைஞர் கைது
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 31 வயதுடைய நபர் ஒருவர், காரில் 78 கிலோ கேரள கஞ்சாவை கடத்தி சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையானது நேற்று முன்தினம்(30.06.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
78 கிலோகிராம் கேரள கஞ்சா
வவுனியா - நெடுங்கேணி பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்று முன்தினம்(30) இரவு பெரியகுளம் சந்தி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடியில், சொகுசு கார் ஒன்றினை சோதனை செய்த போது அதில் 78 கிலோகிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெடுங்கேணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, குறித்த வாகனம் நிறுத்தி சோதனை செய்த போது இந்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.