இலங்கையர்கள் உட்பட்ட 300 பேர் பனாமாவில் தடுத்து வைப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தால் நாடு கடத்தப்பட்ட இலங்கை உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 300 பேரை பனாமா ஒரு விருந்தகத்தில் தடுத்து வைத்துள்ளது.
அவர்களை சொந்த நாடுகளுக்குத் திரும்ப ஏற்பாடு செய்யும் வரை, அங்கு அதிகாரிகளால் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோர், "உதவி" மற்றும் "எங்கள் நாட்டில் நாங்கள் காப்பாற்றப்படவில்லை" என்ற வாசகங்களை ஜன்னல்களின் ஊடாக கவன ஈர்ப்புக்காக வைத்திருக்கின்றனர்.
சிரமத்தை எதிர்கொள்ளும் அமெரிக்கா
ஈரான், இந்தியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா மற்றும் பிற நாடுகள் உட்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களை, நேரடியாக நாடுகடத்துவதில் அமெரிக்கா சிரமத்தை எதிர்கொள்கிறது. எனவே பனாமா ஒரு நிறுத்துமிடமாகப் பயன்படுத்தப்படுகிறது.
பனாமாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இடம்பெயர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக புலம்பெயர்ந்தோருக்கு மருத்துவ உதவி மற்றும் உணவு வழங்கப்பட்டு வருவதாக பனாமாவின் பாதுகாப்பு அமைச்சர் பிராங்க் அப்ரேகோ தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri
