இலங்கையில் சமூக மட்டத்தில் 30 லட்சம் கொவிட் தொற்றாளர்கள் உள்ளதாக தகவல்
இலங்கையில் சமூக மட்டத்தில் கொவிட் தொற்றுக்குள்ளான 30 லட்சத்திற்கும் அதிகமானோர் இருப்பதாக மருந்து மற்றும் சுகாதார முகாமைத்துவ ஆலோசகர் பேராசிரியர் சன்ஜய பெரேரா தெரிவித்துள்ளார்.
நாட்கள் செல்ல செல்ல நாடு மிகவும் அவதானமிக்க இடத்திற்குள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரிகள் மற்றும் ஆலோசர்களினால் ஜனாதிபதி ஏமாற்றப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியு்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் இலங்கையில் புதிய கொரோனா மாறுபாடுகள் உருவாக கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய பயண கட்டுப்பாடுகளில் எவ்வித பயணும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமையை முகாமைத்துவம் செய்துக் கொள்ள வேண்டும் என்றால் 21 நாடுகள் நாட்டை முழுமையாக முடக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணையத்தள தொலைக்காட்சி கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.