இலங்கையிலிருந்து படகு வழியாக தப்பித்து மூவர் தமிழகத்தில் தஞ்சம்
இலங்கையில் இருந்து இன்று(28) அதிகாலை படகு மூலம் சிவில் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மன்னார், பேசாலையில் இருந்து படகு மூலம் மூன்று நபர்கள் இந்தியாவின் மணல் தீடையில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று தமிழகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
தீவிர விசாரணை
இதையடுத்துத் தமிழகப் பொலிஸார் மூன்று நபர்களையும் மீட்டு விசாரணை நடத்தினர்.

இதன்போது ஒருவர் முல்லைத்தீவு மாவட்டம், உடையார்கட்டுப் பகுதியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர் எனவும், ஏனைய இருவரும் புத்தளம் பகுதியைச் சேர்ந்த சிங்களவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
இவர்கள் இலங்கையில் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளனர் தகவலையடுத்துத் தமிழகப் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி: கடுமையாகத் தாக்கிய பிரபலம் News Lankasri