காசாவில் போர் நிறுத்தம்: அழுத்தம் கொடுக்கும் நாடுகள்
காசாவில் 3 நாள்களுக்கு மனிதாபிமான போர் நிறுத்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கும் இடையிலான போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில், வடக்கு காசாவில் இருந்து பாலஸ்தீனிய குடிமக்கள் வெளியேற அனுமதிக்கும் வகையில் தினசரி நான்கு மணிநேரம் சண்டையை நிறுத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை கூறுகிறது.
மனிதாபிமான உதவிகள்
ஹமாஸிடம் உள்ள 10-15 பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதையடுத்து அதற்கு பதிலாக காசாவில் 3 நாள்களுக்கு மட்டும் போரை நிறுத்திவைக்க அமெரிக்கா, கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், காசாவிற்கு உணவு, எரிபொருள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை வழங்குவது குறித்தும் இந்த பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
பாரிஸில் மேற்கு மற்றும் அரபு நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை, அரசு சாரா அமைப்புகள் இணைந்து காசாவிற்கு எவ்வாறு எந்த வகையான உதவிகளை வழங்குவது என்பது குறித்து ஆலோசனை செய்துவருகின்றன.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
