முன்னாள் எம்.பி தங்கத்துரையின் 28ஆவது நினைவு தினம்

Trincomalee Eastern Province
By Kiyas Shafe Jul 06, 2025 07:23 AM GMT
Kiyas Shafe

Kiyas Shafe

in சமூகம்
Report

திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் அருணாசலம் தங்கத்துரையின் 28ஆவது நினைவுதின அஞ்சலி நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வு நேற்று(5) மூதூர் -கிளிவெட்டியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அமரர் அ. தங்கத்துரையின் சொந்த ஊரான மூதூர் -கிளிவெட்டியிலுள்ள அவரது திரு உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி ஒரு நிமிட மௌன அஞ்சலி நிகழ்வு நடைபெற்றுள்ளது.

கருணாவின் முக்கிய சகா ஒருவர் அதிரடி கைது

கருணாவின் முக்கிய சகா ஒருவர் அதிரடி கைது

அஞ்சலி

இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாஸன், மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.பிரகலதன், மூதூர் பிரதேச சபையின் இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள்,அமரர் அ.தங்கத்துரையின் குடும்ப உறுப்பினர்கள், பிரதேச மக்கள்,பாடசாலை மாணவர்கள்,சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் எம்.பி தங்கத்துரையின் 28ஆவது நினைவு தினம் | 28Th Memorial Day Former Mp Thangathurai

மூதூர்- கிளிவெட்டிக் கிராமத்தில் 1936 ஆம் ஆண்டு பிறந்த அருணாசலம் தங்கத்தரை கிளிவெட்டி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் புலமைப் பரிசு பெற்று 1947 இல் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் சென்ற முதல் மாணவராவார். யாழ்ப்பாணம் அரியாலை ஸ்டான்லி கல்லூரியில் 1952 இல் இணைந்து உயர் கல்வியை முடித்தபின் இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தில் எழுதுவினைஞராக 1955 இல் நியமனம் பெற்று இரத்தினபுரியில் இரண்டு வருடங்கள், பின் கொழும்பு ரத்மலானை தலைமைக் காரியாலயம், அதன்பின் 1965 இல் பிரதம லிகிதராக சோமபுர ஆகிய இடங்களிலும் பணியாற்றினார்.

அப்போது இலங்கை எழுதுவினைஞர் சங்க உறுப்பினராக இருந்ததோடு கிளிவெட்டி மற்றும் அண்டைய மூதூர் கிராமங்களின் முன்னேற்றத்திற்கான செயற்பாடுகளிலும் ஈடுபட்டார்.

1970 இலிருந்து 1977 வரை மூதூர் நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றினார். அப்போது 34 வயது இளைஞரான அவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி தலைவராகவும், அக்கட்சியின் மலையக தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் கழகத்தின் தலைவராகவும் பதவி வகித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நிறைவடைந்ததும் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயில ஆரம்பித்து 1980 இல் சட்டத்தரணி ஆனார். 1994 இல் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு அம்மாவட்டத்தில் ஆகக் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டாவது தடவையாக தெரிவு செய்யப்பட்டார்.

முன்னணி தனியார் வாடகை கார் நிறுவனம் ஒன்றிற்கு எதிராக வழக்கு தாக்கல்

முன்னணி தனியார் வாடகை கார் நிறுவனம் ஒன்றிற்கு எதிராக வழக்கு தாக்கல்

படுகொலை

தமிழர் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த அதேவேளையில் மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளான உணவு, இருப்பிடம், கல்வி, வேலை வாய்ப்பு, கிராம நகர அபிவிருத்தி ஆகியவை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

முன்னாள் எம்.பி தங்கத்துரையின் 28ஆவது நினைவு தினம் | 28Th Memorial Day Former Mp Thangathurai

ஆசிரியர் பற்றாக்குறையை நிறைவு செய்வதற்காக புதிய நியமனங்கள் வழங்கப்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவிருந்த பாடசாலைகள் மகாவித்தியாலயங்களாக்கப்பட்டன. வெளிநாட்டுத் தூதரகங்கள், நலம்புரி அமைப்புக்கள் என்பவற்றின் அணுசரணைகளைப் பெற்று பல பாடசாலைகளின் தொடர்ச்சியான திட்டமிட்ட வளர்ச்சிக்கு வழிவகுத்துக் கொடுத்தார்.

1997 ஆம் ஆண்டு ஆடி மாதம் 5ஆம் நாள் மாலை திருகோணமலை நகரில் உள்ள ஸ்ரீ சண்முக வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டிடத்தைத் திறந்து வைத்துவிட்டு வெளிவந்த சமயம் குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

அந்த துயரச் சம்பவத்தில் கல்லூரியின் அதிபர் ராஜேஸ்வரி தனபாலசிங்கம், நாமகள் வித்தியாலய அதிபர் திரு. ஜோசப், கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் உப அதிபர் திரு. சீவரத்தினம், பாடசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர் கணேசலிங்கம், தொழில்நுட்பவியளாளர் இரட்னராஜா ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டனர்.

இலங்கையில் ஆயிரக்கணக்கான அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு ஆபத்து

இலங்கையில் ஆயிரக்கணக்கான அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு ஆபத்து

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US