மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 பாடசாலைகள் திறக்கப்படவில்லை
கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் புதிய தவணைக்காக நாடளாவிய ரீதியில் இன்று திறக்கப்பட்ட போதிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள 25 பாடசாலை திறக்கப்படவில்லை என தெரியவருகிறது.
மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தினுள் அடங்கும் காத்தான்குடி கல்வி கோட்டத்தில் அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் மூடப்பட்டிருந்தன.
குறித்த பிரதேசத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் உள்ளது.
இதனால் மறு அறிவித்தல் வரை பாடசாலைகள் மூடப்பட்டிருக்குமென மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தின் ஏனைய அனைத்து பாடசாலைகளும் திறக்கப்பட்டிருந்த போதிலும் ஹர்த்தால் காரணமாக அதிபர், ஆசிரியர்கள் அப்பாடசாலைகளுக்குச் சமூகமளித்திருந்த போதிலும், மாணவர்கள் வருகை தந்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.




சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri