மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 பாடசாலைகள் திறக்கப்படவில்லை
கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் புதிய தவணைக்காக நாடளாவிய ரீதியில் இன்று திறக்கப்பட்ட போதிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள 25 பாடசாலை திறக்கப்படவில்லை என தெரியவருகிறது.
மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தினுள் அடங்கும் காத்தான்குடி கல்வி கோட்டத்தில் அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் மூடப்பட்டிருந்தன.
குறித்த பிரதேசத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் உள்ளது.
இதனால் மறு அறிவித்தல் வரை பாடசாலைகள் மூடப்பட்டிருக்குமென மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தின் ஏனைய அனைத்து பாடசாலைகளும் திறக்கப்பட்டிருந்த போதிலும் ஹர்த்தால் காரணமாக அதிபர், ஆசிரியர்கள் அப்பாடசாலைகளுக்குச் சமூகமளித்திருந்த போதிலும், மாணவர்கள் வருகை தந்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.




ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan