மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 பாடசாலைகள் திறக்கப்படவில்லை
கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் புதிய தவணைக்காக நாடளாவிய ரீதியில் இன்று திறக்கப்பட்ட போதிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள 25 பாடசாலை திறக்கப்படவில்லை என தெரியவருகிறது.
மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தினுள் அடங்கும் காத்தான்குடி கல்வி கோட்டத்தில் அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் மூடப்பட்டிருந்தன.
குறித்த பிரதேசத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் உள்ளது.
இதனால் மறு அறிவித்தல் வரை பாடசாலைகள் மூடப்பட்டிருக்குமென மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தின் ஏனைய அனைத்து பாடசாலைகளும் திறக்கப்பட்டிருந்த போதிலும் ஹர்த்தால் காரணமாக அதிபர், ஆசிரியர்கள் அப்பாடசாலைகளுக்குச் சமூகமளித்திருந்த போதிலும், மாணவர்கள் வருகை தந்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.










புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri
