மாதகலில் 240 கிலோ கஞ்சா மீட்பு!
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்ட 240 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையே குறித்த கஞ்சா பொதிகள் கடற்கரையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
நேற்றைய தினம் புதன்கிழமை அதிகாலை மாதகல் கடற்பரப்பில் ஆட்களற்ற சந்தேகத்துக்கிடமான படகு ஒன்று நிற்பதைக் கடற்படையினர் அவதானித்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த படகைக் கடற்படையினர் சோதனையிட்ட போதே 240 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடற்படையினர் தீவிர விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.