மன்னார் மாவட்ட கோவிட் நிலவரம்
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மேலும் புதிதாக 23 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கடந்த 17 நாட்களில் 400 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (18) அவர் விடுத்துள்ள கோவிட் நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது,
குறித்த அறிக்கையில் மேலும்,
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (17) மேலும் புதிதாக 23 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரை 400 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வருடம் 601 தொற்றாளர்களும், மாவட்டத்தில் தற்போது வரை 3784 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 39 கோவிட் மரணங்களும் நிகழ்ந்துள்ளது என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.



