உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 220 மில்லியன் இழப்பீடு
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 220 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(12.01.2024) அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் பலியானவர்களின் குழந்தைகளுக்கு புலமைப்பரிசில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் குண்டுதாக்குதலில் பலியானவர்களின் குழந்தைகளுக்கு மாதாந்த உதவிகளை வழங்குவதற்காக ஒரு மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் சமூக சேவைப் பிரிவான ‘சேத் சரண’ மூலம் பயனாளிகள் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
அத்துடன் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவிகள் வழங்கப்படவுள்ளன” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
