22 நிறைவேறினால் மாத்திரமே இலங்கையில் புதிய அரசியலமைப்பு:நீதியமைச்சர் தகவல்

Dr Wijeyadasa Rajapakshe Sri Lanka Politician Sri Lankan political crisis
By Sivaa Mayuri Oct 16, 2022 11:46 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in அரசியல்
Report

இலங்கையில் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் பேசுவதற்கு தற்போது உரிய நேரம் அல்ல என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, அமைக்கப்பட்ட 9 பேரைக்கொண்ட குழுவின் அரசியலமைப்பு வரைபு வெளியாகியுள்ளது. அதன் பிரதி, விஜயதாச ராஜபக்சவிடம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் அதனை தம்மால் சரிபார்க்க முடியாது என்றும் அதற்காக அமைக்கப்படும் அரசியலமைப்பு குழு ஒன்றினால் மாத்திரமே அதனை சரிபார்க்க முடியும் என்றும் விஜயதாச குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு அல்லது தீர்மானிப்பதற்கு முன்னர் 22வது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும்.

புதிய அரசியலமைப்பை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து ஆலோசிப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதியை கோரியுள்ளேன்.

எந்த காரணமும் இல்லை

22 நிறைவேறினால் மாத்திரமே இலங்கையில் புதிய அரசியலமைப்பு:நீதியமைச்சர் தகவல் | 22 Is Passed Justice Minister Informs

அரசியலமைப்பு செயல்முறை மக்களின் அங்கீகாரத்துடன் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் அது வெற்றிகரமான அரசியலமைப்பாக அமையும். அத்துடன் அது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அங்கீகாரத்தைப் பெறுவது போன்றே முக்கியமானது.

22வது திருத்தச் சட்டமூலத்தின் மீதான இரண்டாவது வாசிப்பு விவாதம் ஒக்டோபர் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சிகளும் அதற்கு ஆதரவாக வாக்களிக்கும்.

22 ஆவது திருத்தம் தொடர்பில் முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், அதற்கு எதிராக வாக்களிக்க எவருக்கும் எந்த காரணமும் இல்லை. எனவே 22வது திருத்தத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்கிறார்களா என்பதை முதலில் பார்க்க வேண்டும்.

அதன்பிறகுதான் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவது பற்றி சிந்திக்க வேண்டும். மக்கள் கருத்துக்களை அனைவரும் மதிக்க வேண்டும். அப்படி நடந்தால் தான் நாடு முன்னேறும்.

புதிய அரசியலமைப்பு

22 நிறைவேறினால் மாத்திரமே இலங்கையில் புதிய அரசியலமைப்பு:நீதியமைச்சர் தகவல் | 22 Is Passed Justice Minister Informs

1978 அரசியலமைப்பை ஐக்கிய தேசியக் கட்சி கொண்டு வந்த போது மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை. அது கட்சியை பலப்படுத்தும் வகையிலேயே அமைந்தது.

அரசியலமைப்பு மக்களையும் மாநிலத்தையும் அதிகாரம் செய்ய வேண்டும், அது அரசாங்கங்கள், கட்சிகள் அல்லது அரசியல்வாதிகளுக்கு அதிகாரம் அளிக்கக் கூடாது.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவினால் சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா மூலம் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பு குறித்து கருத்துரைத்த அவர், சிறப்புக் குழுக்கள் அல்லது குழுக்கள் அரசியலமைப்பை உருவாக்க முடியாது. உலகில் எங்கும் இது நடக்கவில்லை.

இந்திய அரசியலமைப்பு, டாக்டர் ராம்ஜி அம்பேத்கரின் கீழ் நாடாளுமன்றத்திற்குள் இருந்து அரசியலமைப்பு பேரவை மூலம் உருவாக்கப்பட்டது.

1786 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் உள்ள 13 மாநிலங்கள் ஒன்றிணைந்து ஜேம்ஸ் மேடிசனை அரசியலமைப்பை உருவாக்க கூறின.

1948 இல் இலங்கையில் சோல்பரி ஆணைக்குழு அரசியலமைப்பை உருவாக்கியது.

1972 ஆம் ஆண்டு, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசியலமைப்பை மாற்ற விரும்பியபோது, சோல்பரி ஆணைக்குழு அதைச் செய்ய முடியாது என்று கூறியதால் அவர் ஒரு சிக்கலை எதிர்கொண்டார். அதனால்தான் ஸ்ரீமாவோ ஒரு புரட்சிகர அரசியலமைப்பு வரைவு முறையை நாடினார்.

அத்துடன் கொல்வின் ஆர். டி சில்வாவின் கீழ் ஒரு அரசியலமைப்பு பேரவை மூலம் நாடாளுமன்றத்திற்கு வெளியே இருந்து அதை உருவாக்கினார். இது பொது சட்டத்திற்கு புறம்பாக நடந்தது.

எனினும் பெரும்பான்மை இருந்தமையால் ஜே.ஆர். ஜயவர்தனவின் காலத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை என்றும் விஜயதாச குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US