உத்தேச 22ம் திருத்தச் சட்டம்: அமைச்சரவையில் சமர்ப்பிப்பு
உத்தேச 22ம் திருத்தச் சட்டம் இன்றைய தினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
ஏற்கனவே வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட உத்தேச 22ம் திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திருத்தங்கள் அடங்கிய உத்தேச 22ம் திருத்தச் சட்டம் இன்றைய தினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர்கள் நியமனம், பதவி நீக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கக்கூடிய வகையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் முன்மொழியப்பட்ட சில சரத்துக்கள் புதிய உத்தேச திருத்தச் சட்டத்தில் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டாபய நாடு திரும்புவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் வெளியிட்டுள்ள தகவல் |
அதியுச்ச அதிகாரம் பயன்படுத்தப்படும் - பாதுகாப்பு செயலாளர் கடும் எச்சரிக்கை |