கோறளைப்பற்று மத்தியில் 212 டெங்கு நோயாளர்கள் அடையாளம் - சுகாதார வைத்திய அதிகாரி
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் பெப்ரவரி இரண்டாம் திகதி வரை 212 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான் தெரிவித்துள்ளார்.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துக் காணப்படும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு புகை விசிறல் நடவடிக்கைகள் தொடரச்சியாக இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் அதிக டெங்கு தாக்கம் காணப்படும் இடங்களிலுள்ள வீடுகளுக்கு டெங்கு புகை விசிறல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் பெப்ரவரி இரண்டாம் திகதி வரை 212 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் 42 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான் தெரிவித்துள்ளார்.










தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 12 மணி நேரம் முன்

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
