உலகம் முழுவதும் ஹமாஸை தேடித்தேடி வேட்டையாட தயாராகும் இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவுகள் (Video)
கடந்த ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி இஸ்ரேல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பங்குபற்றிய ஹமாஸ் உறுப்பினர்களை படுகொலை செய்யும்படியான உத்தரவை இஸ்ரேலிய பிரதமர் பென்ஞமீன் நெதன்யாகு இஸ்ரேலிய புலனாய்வு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் ஓர் முன்னணி ஊடகமான த வோல்ஸ் கிறீன் ஜேர்னல் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்டு சுமார் 1200 இஸ்ரேலியர்களை படுகொலை செய்து, ஏராளமானவர்களை உயிருடன் பிடித்து சென்றிருந்த அந்த சம்பவத்தில் தொடர்புடைய அத்தனை ஹமாஸ் உறுப்பினர்களையும் தேடித்தேடி வேட்டையாடும் படியாக இஸ்ரேலிய புலனாய்வு பிரிவுகள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும், அந்த தாக்குதல் சம்பவத்தில் ஏதோ ஒருவகையில் சம்பந்தப்பட்ட நபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றாலும், அவர்களையும் தேடி சென்று படுகெலை செய்யும்படியான உத்தரவுகள் இஸ்ரேலிய புலனாய்வு பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
காசாவில் யுத்தம் முடிவடைந்து ஒரு வருடத்திற்குள் இந்த வேட்டை நடைபெறுமென்று கூறியுள்ள நிலையில், இது தொடர்பில் மேலும் ஆராய்கிறது இன்றைய நிதர்சனம் நிகழ்ச்சி..
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam