ஜனாதிபதி அநுரவின் அதிரடி தீர்மானம்! அதிகரிக்கப் போகும் டொலரின் பெறுமதி
வாகன இறக்குமதிக்கு தீர்வையில்லா அனுமதி பத்திரங்கள் எனிமேல் வழங்கபட மாட்டாது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தீர்வையற்ற வாகன அணுகலுக்கு அரச ஊழியர்கள் உட்பட 20,000 பேர் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளதாகவும், ஆனால் வாகனங்களை இறக்குமதி செய்யும் போது அந்த வாய்ப்பு வழங்கப்படாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த மாதம் வாகன இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கும் போது வாகன விலைகள் அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வாகன இறக்குமதி
வாகன இறக்குமதி 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்ததாகவும், 2018 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்காக சுமார் 2 பில்லியன் டொலர்களும், 2019 ஆம் ஆண்டில் 1.4 பில்லியன் டொலர்களும் செலவிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

டொலர் மதிப்பு 190 ரூபாவை இருந்தபோது, டொலர் மதிப்பு 300 ரூபாவை நெருங்கும்போது இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை சுமார் 40 சதவீதம் அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
டொலரின் பெறுமதி
எவ்வளவு டொலர்களை ஒதுக்கலாம் என்பது குறித்து மத்திய வங்கியுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் மிகப்பெரிய உயர்வு ஏற்படக்கூடும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
எனவே, ஆரம்பத்தில் வாகன விலைகள் அதிகரிக்கும் என அவர் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri