எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கியுள்ள 200க்கும் மேற்பட்ட மலையேறிகள்!
கடும் பனிப்பொழிவுக்குப் பிறகு எவரெஸ்ட் சிகரத்தின் திபெத்திய சரிவுகளில் சிக்கியுள்ள 200க்கும் மேற்பட்ட மலையேறுபவர்களை மீட்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இதன்படி அதிகாரிகள் அவர்கள் அனைவரையும் தொடர்பு கொள்ள முடிந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் , சரிவுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க சீன அரசு தற்போது ஒரு பெரிய நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
சீரற்ற வானிலை
இதற்கிடையில், நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அருகிலுள்ள குடான் கிராமத்திற்கு சுமார் 350 பேர் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
சீனாவின் தேசிய தினத்துடன் இணைந்த 8 நாள் தேசிய விடுமுறை காரணமாக, பல சீன மக்கள் எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்கு முகத்தை அளவிட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், மோசமான வானிலை காரணமாக மலை ஏற முயன்ற மக்கள் மிகுந்த துயரத்தில் இருந்ததாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
