கடலில் மூழ்கி மாயமான 20 வயது இளைஞர் சடலமாக மீட்பு
திருகோணமலை(Trincomalee), கடற்கரையில் நேற்றுமுன்தினம்(30) குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கிக் காணாமல்போன 20 வயதான இளைஞர் இன்று(1) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் மாலை திருகோணமலை கடற்கரையில் நண்பர்கள் 4 பேர் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய நிலையில்அவர்களில் மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
சடலமாக மீட்பு
ஒருவர் காணாமல்போனதையடுத்து அவரைத் தேடும் பணி திருகோணமலை கடற்படையினர் மற்றும் துறைமுகப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்தச் சம்பவத்தையடுத்து காப்பாற்றப்பட்ட இளைஞர்கள் மூவரும் விசாரணைக்காக திருகோணமலை துறைமுகப் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில், காணாமல்போன இளைஞர் இன்று காலை சடலமாக மீட்கப்படுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் திருகோணமலை துறைமுகப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |