பெறுமதியான வாகனங்களை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் 20 வயது இளைஞர் கைது
சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் பல மில்லியன் ரூபா பெறுமதியான வாகனங்களை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது சம்பவம் நேற்று (10.10.2022) நடந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு - பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல மில்லியன் ரூபா பெறுமதியான வாகனங்கள்
கைது செய்யப்பட்ட இளைஞர் 6.5 மில்லியன் மதிப்புள்ள கார் மற்றும் 25 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஜீப் ஆகியவற்றை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோதமான முறையில் தனது தந்தை சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தியே குறித்த இளைஞர் வாகனங்களை கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ள சந்தேகநபர்
இதேவேளை சந்தேகநபர் இன்று (11.10.2022) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் அல்லது சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 12 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam