தெதுருஓயா நீரில் இழுத்துச் செல்லப்பட்ட இருவர் மாயம்
சிலாபம், தெதுரு ஓயாவில் இன்று (1) பிற்பகல் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட இரண்டு வாலிபர்கள் காணாமல் போயுள்ளனர்.
நீரில் இழுத்துச் செல்லப்பட்ட மூன்று யுவதிகள் பிரதேச வாசிகளால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரு இளைஞர்கள்
கண்டி பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் பணிபுரியும் 20 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்களே காணாமல் போயுள்ளனர்.
காப்பாற்றப்பட்ட மூவரும் இளம் யுவதிகள் எனவும், அதே பல்பொருள் அங்காடியில் பணிபுரிபவர்கள் எனவும் தெரியவருகிறது.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பல்பொருள் அங்காடியை மூடிவிட்ட அதன் உரிமையாளரும் ஊழியர்களும் இந்த சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டிருந்தனர். இவர்கள் முதலில் சிலாபம் கடற்கரைக்குச் சென்றதோடு, பின்னர் இந்தக் குழு தெதுரு ஓயாவிற்கு சென்றுள்ளது.
மூன்று யுவதிகள்
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீராடியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் போது அவர்களில் ஐவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அதன் போது மூன்று யுவதிகள் காப்பாற்றப்பட்ட நிலையில், இரண்டு வாலிபர்கள் காணாமல் போயுள்ளனர்.
பிரதேசவாசிகளின் உதவியுடன் காணாமல் போனவர்களைத் தேடும் பணி நீண்ட நேரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து சிலாபம் பொலிஸார் கடற்படைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
