வாலிபர் ஒருவரைக் கடத்தி உயிருடன் எரித்த கொடூரம்! இருவர் கைது
வாலிபர் ஒருவரைக் கடத்தி வந்து கடுமையாகத் தாக்கி, உயிருடன் எரித்த கொடூர சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட, ஹுலுதாகொட பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கடத்தி வரப்பட்டு, கல்கிஸ்ஸை, ஹுலுதாகொட பகுதியில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார்.
விசாரணை
பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய எரிந்த நிலையில், அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கல்கிஸை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு ஒரு முச்சக்கர வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
