வாலிபர் ஒருவரைக் கடத்தி உயிருடன் எரித்த கொடூரம்! இருவர் கைது
வாலிபர் ஒருவரைக் கடத்தி வந்து கடுமையாகத் தாக்கி, உயிருடன் எரித்த கொடூர சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட, ஹுலுதாகொட பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கடத்தி வரப்பட்டு, கல்கிஸ்ஸை, ஹுலுதாகொட பகுதியில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார்.
விசாரணை
பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய எரிந்த நிலையில், அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கல்கிஸை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு ஒரு முச்சக்கர வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri
