2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி விவகாரம்: ஹர்ஷ டி சில்வா வீட்டிற்கு வந்த இரகசிய அறிக்கை

Dollar to Sri Lankan Rupee Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government Harsha de Silva
By Rakesh Jun 03, 2026 10:34 AM GMT
Report

நிதி அமைச்சுக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடியாகப் பரிமாற்றப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில், தமக்குத் தனிப்பட்ட முறையில் அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய அறிக்கையைத் தான் நிராகரித்துள்ளதாக நாடாளுமன்ற அரச நிதி பற்றிய குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கை குழுவின் பரிசீலனைக்காக நாடாளுமன்ற உத்தியோகபூர்வ நடைமுறைகளின் ஊடாகவே முறைப்படி சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச நிதி பற்றிய குழுவின் கூட்டத்தில் இந்த விடயம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விலையில் கடுமையான உயர்வு! பின்னணியில் இருக்கும் ஊழல்..

எரிபொருள் விலையில் கடுமையான உயர்வு! பின்னணியில் இருக்கும் ஊழல்..

இரகசிய அறிக்கை

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த நிதிப் பரிமாற்றம் தொடர்பான முழுமையான விபரங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சகல ஆவணங்களையும் உள்ளடக்கிய அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு எமது குழுவினால் ஏற்கனவே உத்தியோகபூர்வமாகப் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி விவகாரம்: ஹர்ஷ டி சில்வா வீட்டிற்கு வந்த இரகசிய அறிக்கை | 2 5 Million Financial Fraud Case

இந்த அறிக்கையைத் தயாரித்துச் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சுக்கு நான்கு வார கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைய, அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்ட போதிலும், அது எனது 'தனிப்பட்ட பார்வைக்காக' மாத்திரம் எனக்குத் தனிப்பட்ட முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய ஒரு நடவடிக்கை முறையானது அல்ல என்பதுடன், இதனை எந்த காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த அறிக்கையானது எனது தனிப்பட்ட தேவைக்காகக் கோரப்படவில்லை, மாறாக அரச நிதி பற்றிய குழுவின் ஒட்டுமொத்தப் பரிசீலனைக்காகவே கோரப்பட்டிருந்தது.

திருப்பி அனுப்ப நடவடிக்கை

நான் மக்களின் பிரதிநிதி என்பதுடன், தற்போது நாடாளுமன்ற அரச நிதி பற்றிய குழுவின் தலைவராக மாத்திரமே தற்காலிகமாகப் பணியாற்றுகின்றேன்.

எனவே, இந்த அறிக்கை எமது குழுவினால் விரிவாக ஆராயப்பட்டு விவாதிக்கப்பட வேண்டியதொன்றே தவிர, எனது தனிப்பட்ட வாசிப்புக்கானது அல்ல. இதன் காரணமாக, எனக்குத் தனிப்பட்ட முறையில் வந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்து, அதனை நாடாளுமன்றச் செயலகத்தின் ஊடாகவே திருப்பி அனுப்புவதற்கு நான் நடவடிக்கை எடுத்துள்ளேன்.

2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி விவகாரம்: ஹர்ஷ டி சில்வா வீட்டிற்கு வந்த இரகசிய அறிக்கை | 2 5 Million Financial Fraud Case

பொது நிதி தொடர்பான விவகாரங்களை மேற்பார்வையிடுவதற்கான அரசியலமைப்பு ரீதியான பொறுப்பு நாடாளுமன்றக் குழுக்களுக்குக் காணப்படுகின்றது என்பதை இங்கு நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

இந்த அறிக்கை முறைப்படி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆய்வுக் காகக் கிடைக்கப் பெற வேண்டும் என்பதில் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக உடன்பட்டுள்ளனர்.

நிதி மோசடிக் குற்றச்சாட்டுகள்

இதன்படி, எட்டப்பட்டுள்ள தீர்மானத்துக்கு அமைய, அரச நிதி பற்றிய குழுவானது இன்று புதன்கிழமைக்குள் இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தின் ஊடாக உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அறிக்கை கிடைக்கப் பெற்றதும், குழுவின் உறுப்பினர்கள் அதன் உள்ளடக்கங்களை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே, அடுத்த கட்டக் கலந்துரையாடல்களுக்காக இந்த விடயம் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி விவகாரம்: ஹர்ஷ டி சில்வா வீட்டிற்கு வந்த இரகசிய அறிக்கை | 2 5 Million Financial Fraud Case

நடைமுறையிலுள்ள நாடாளுமன்ற மரபுகள் மற்றும் விதிமுறைகளை மீறிச் செயற்பட முற்படும் இத்தகைய முயற்சிகள், பொது நிதி தொடர்பான பொறுப்புக்கூறல் மற்றும் ஜனநாயகக் கண்காணிப்பு செயல்முறைகளைக் பலவீனப்படுத்தும்.

குறிப்பாகப் பொது நிதி மற்றும் நிதி மோசடிக் குற்றச்சாட்டுகள் நிலவும் விவகாரங்களில் இத்தகைய தன்னிச்சையான போக்குகள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றார்.   

இலங்கை உட்பட 60 நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா

இலங்கை உட்பட 60 நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா

குவைத் விமான நிலையத்தை இலக்கு வைத்த ஈரான் : முடக்கப்பட்ட விமான சேவைகள்

குவைத் விமான நிலையத்தை இலக்கு வைத்த ஈரான் : முடக்கப்பட்ட விமான சேவைகள்


1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US