மேல்மாகாணத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரை 2,361 பேர் கைது
முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் இதுவரையில் மேல் மாகாணத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 25 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையின் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்திருக்கிறார்.
இவர்களில் 1077 பேருக்கு மேற்கொண்ட விரைவு அன்டிஜன் சோதனையில் 19 பேர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். கொழும்பு மாநகர பகுதியில் முகக்கவசம் அணியாத 2025 பேர் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவர்களுக்கு எதிராக தொற்று நோய் சட்ட விதிகளுக்கு அமைவாகவும், தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு அமைவாகவும் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரையில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் 2,361 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹண தெரிவித்திருக்கிறார்.