தெங்குசார் பொருட்களின் ஏற்றுமதியில் நாட்டிற்கு கிடைத்துள்ள பல மில்லியன் ரூபா வருமானம்
தெங்குசார் பொருட்களின் ஏற்றுமதி மூலம் மார்ச் மாதத்தில் மாத்திரம் 19,131 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதென தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
தெங்குசார் பொருட்கள் மற்றும் ஏற்றுமதியின் வருமானம் தொடர்பில் தென்னை அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள மாதாந்த அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்றுமதி தொடர்பான அறிக்கை
விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் (Mahinda Amaraweera) தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெர்னாண்டோவினால் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தெங்குசார் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி தொடர்பான அறிக்கை கையளிக்கப்பட்டது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தோட்டக்கலைக்காக இலங்கையிலிருந்து 38,065 மெட்ரிக் தொன் தென்னை நார் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதுடன் அதிலிருந்து 5,725 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்தத் தொகை 29 சதவீத வளர்ச்சியடைந்துள்ளது.
தேங்காய், பால்மா ஏற்றுமதி
தேங்காய் மட்டைகளிலிருந்து 5,707 மெட்ரிக் தொன் செயல்படுத்தப்பட்ட கார்பன் ஏற்றுமதி மார்ச் 2024 இல் ரூபா 4,430 மில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் 7,059 மெட்ரிக் தொன் தேங்காய் பால் ஏற்றுமதி செய்யப்பட்டதன் மூலம் 3,122 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
புதிய தேங்காய் ஏற்றுமதி மூலம் மார்ச் மாதத்தில் 2,378 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதுடன் அந்த மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட உலர் தேங்காயின் அளவு 3592 மெட்ரிக் தொன்னென கூறப்படுகின்றது.
தேங்காய் பால்மா ஏற்றுமதி மூலம் 1,587 மில்லியன் ரூபாவும், தேங்காய் கிரீம் ஏற்றுமதி மூலம் 1,390 மில்லியன் ரூபாவும், தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி மூலம் 539 மில்லியன் ரூபாவும் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் திருவிழா





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 20 மணி நேரம் முன்

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam
