இலங்கையில் தொடரும் கோவிட் - 19 மரணங்கள்! இன்றும் ஐவர் பலி
நாட்டில் கோவிட் - 19 வைரஸ் தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இன்றைய தினம் ஐந்து கோவிட் - 19 மரணங்கள் பற்றிய விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கையில் மொத்த கோவிட் - 19 மரணங்களின் எண்ணிக்கை 384 ஆக உயர்வடைந்துள்ளது.
1. கொட்டகலை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதான ஆண் ஒருவர், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 9ம் திகதி உயிரிழந்துள்ளார். கோவிட் - 19 நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
2. மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த 79 வயதான ஆண் ஒருவர், அனுராதபுரம் போதான வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கோவிட் - 19 நிமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் இவர் உயிரிழந்துள்ளார்.
3. கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதான ஆண் ஒருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கோவிட் - 19 நிமோனியா, நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்களினால் இவர் உயிரிழந்துள்ளார்.
4. கொழும்பு 8 பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதான ஆண் ஒருவர் வெலிசறை வைத்தியசாலையில் கடந்த 5ம் திகதி உயிரிழந்துள்ளார். சுவாசப் பிரச்சினை மற்றும் கோவிட் - 19 நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
5. கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதான ஆண் ஒருவர் வெலிசறை வைத்தியசாலையில் கடந்த ஜனவரி மாதம் 28ம் திகதி உயிரிழந்துள்ளார். கோவிட் - 19 நிமோனியா மற்றும் நுரையீரல் பிரச்சினையினால் இவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 17 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam