இலங்கையில் அதிகரிக்கும் டெல்டா மாறுபாடு பேரழிவில் முடிவடையும்! வெளியான தகவல்
இலங்கையில் நேற்று மேலும் 19 கொரோனா டெல்டா மாறுபாடு தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட நிலையில், நாட்டில் இதுவரை கண்டறியப்பட்ட டெல்டா மாறுபாட்டின் மொத்த எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.
எனினும் சுகாதார அமைச்சு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தியுள்ளதுடன், மக்கள் பொறுப்புடன் செயல்படுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துரைத்துள்ள சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் ஹேமந்த ஹேரத்,
சுகாதார வழிகாட்டுதல்களின் தளர்வு என்பது நாட்டின் சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை பராமரிப்பதாகும்.நாட்டை காலவரையின்றி மூடி வைத்திருப்பது சாத்தியமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே மக்கள் பொறுப்பை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு, நோய் பரவுவதற்கு இடமளிக்காமல் சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொதுமக்களின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் ஒரு தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் அது பொருளாதார நடவடிக்கைகள் உட்பட அனைத்து சிறந்த விடயங்களை பூர்த்தி செய்யாது என்று ஹேரத் தெரிவித்துள்ளார்.
எனவே, கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம், சுகாதார நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதில் மக்கள் பொறுப்புடன் செயல்படுவது மிக முக்கியமானது என்று ஹேரத் கூறினார்.
மக்கள் தளர்வை தவறாகப் பயன்படுத்தினால், அது பேரழிவு தரும் சூழ்நிலையில் முடிவடையும்.
அத்துடன் எதிர்காலத்திலும் டெல்டா மாறுபாடு தொற்றுகள் பதிவாகும் என்று அவர் கூறியுள்ளார்.