செஞ்சோலை படுகொலையின் 18ஆம் ஆண்டு நினைவுக்கூரல்
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
செஞ்சோலை படுகொலையின் 18ஆம் ஆண்டு நினைவுக்கூரல் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கொல்லப்பட்டவர்களின் உருவப்படங்களுக்கு பல்கலைக்கழக மாணவர்களால் சுடரேற்றி, மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவேந்தலில் பல்கலைக்கழக மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



செய்தி - தீபன்
முல்லைத்தீவு செஞ்சோலை வாளாகம்
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டம் வள்ளிபுனம் செஞ்சோலை வாளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு விமானத்தாக்குதலில் கொல்லப்பட்ட 54 மாணவச் செல்வங்களின் 18ஆம் ஆண்டு நினைவுநாள் நினைவு கூறப்பட்டுள்ளது.
செஞ்சோலை வளாகத்தின் நினைவு வளைவு அமைந்துள்ள முன்வீதியில் தாய்த்தமிழ் பேரவையினரில் ஏற்பாட்டில் நேற்று (14.08.20224) குறித்த நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
இந்நிகழ்வில், பொது ஈகை சுடரினை செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட 2 பிள்ளைகளின் தந்தையார் ஏற்றிவைத்தார்.
பொதுமக்கள்
அதனைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட பெற்றோர் பிள்ளைகளின் திருவுருவப்படத்துக்கு சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், தமிழ்த்தேசிய செயற்ப்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.


| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri