மறைந்த ஊடகவியலாளர் நிலக்சனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் (Photos)
ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவேந்தல் யாழ். ஊடக அமையத்தில் இன்று (01.08.2023) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்திற்கு மலர் மாலை அணியப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு, சுடரேற்றப்பட்டது.
பெற்றோர்கள் முன்னிலையில் சுட்டுப்படுகொலை
யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடக கற்கை மாணவராகவும், சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும், யாழ்,மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான பதவி வகித்துள்ளார்.
இவர் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி அவரது வீட்டில் இருந்தபோது அவரது வீட்டிற்கு அதிகாலை 5 மணியளவில் சென்ற ஆயுதாரிகள் வெளியே அழைத்து அவரது பெற்றோர்கள் முன்னிலையில் சுட்டுப்படுகொலை செய்தமை குறிப்பிடத்தக்கது.

12 ஆண்டுகளாக வேலையே செய்யாமல் ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய பொலிஸ்காரர்.., கண்டுபிடித்தது எப்படி? News Lankasri
