தொடர் மழையால் யாழ்ப்பாணத்தில் 15 குடும்பங்கள் பாதிப்பு
தொடர்ச்சியாக பொய்யும் மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் (Jaffna) 15 குடும்பங்களைச் சேர்ந்த 60பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/157 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/278 கிராம சேவகர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிப்புக்குள்ளானோர்
மேலும், பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/410 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேரும், ஜே/417 கிராம சேவகர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஜே/393 கிராம சேவகர் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேரும், ஜே/413 கிராம சேவகர் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 7பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri
