வடக்கில் நீர்வேளாண்மையை ஊக்குவிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தகவல்

Douglas Devananda Aquaculture Marine culture
By Independent Writer Oct 09, 2021 06:07 AM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் நீர்வேளாண்மையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பெருந் தொகையினை சரியான முறையில் பயன்படுத்தி பயனாளர்கள் தங்களுடைய வாழ்வை வளப்படுத்திக் கொள்வதுடன் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பங்களிப்பு செய்ய முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ( Douglas Devananda ) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் கடலட்டை வளர்ப்பு, கடல் பாசி செய்கை மற்றும் கொடுவா மீன் வளர்ப்பில் ஈடுபட விரும்புகின்ற தொழில் முயற்சியாளர்களை தெரிவு செய்து பயனாளர்களுக்கு ஆரம்ப முதலீடுகளை வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பாகவே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

கடற்றொழில் அமைச்சின் தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படுகின்ற இந்தத் திட்டங்களிற்காக களப்பு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி பிரிவினால் சுமார் 11 கோடி 65 இலட்சம் ரூபாய்களும் சமுர்த்தித் திட்டத்தின் ஊடாக சுமார் 2 கோடி 90 இலட்சம் ரூபாய்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில், களப்பு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திப் பிரிவினரால் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து வடக்கு மாகாணத்தில் கடல் பாசி செய்கை மேற்கொள்வதற்காக 100 பயனாளர்களும் கலட்டை வளர்ப்பிற்காக 100 பயனாளர்களும் கொடுவா மீன் வளர்ப்பிற்காக 50 பயனாளர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

அதனைவிட தெரிவு செய்யபட்ட நன்னீர் நிலைகளில் இறால் மற்றும் மீன் குஞ்சுகளை விடுவதன் மூலம் அந்தந்தப் பிரதேச மக்களுக்க வாழ்வதாரத்தினை எற்படுத்தல் போன்ற சுமார் 7 வேலைத் திட்டங்கள் திட்டமிடப்பட்டு அவற்றிற்கான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதே போன்று சமுர்த்தித் திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி கடல் பாசி செய்வதற்கு 115 பயனாளர்களும் கொடுவா மீன் வளர்ப்பிற்கு 60 பயனாளர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர். 

குறித்த இரண்டு திட்டங்களிற்காகவும் தெரிவு செய்யப்படுகின்ற பயனாளர்களுக்கு கடல் பாசி வளர்ப்பிற்கு தலா ஒரு இலட்சம் ரூபாய்களும் கொடுவா மீன் வளர்ப்பிற்காக தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்களும் கடலட்டை வளப்பிற்காக தலா 5 இலட்சம் ரூபாய்களும் வழங்கப்படவுள்ளன.

குறித்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான பயனாளர்கள் தெரிவுகள் ஆரம்பிக்கபட்டுள்ள நிலையில், திட்டங்கள் தொடர்பாக பயனாளர்களுக்கு தெளிவுபடுத்தி, இந்த நிதியுதவியைப் ஆரம்ப முதலீடுகளாகக் கொண்டு நீடித்த பொருளாதார நன்மைகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் பயனாளர்கள் தொடர்ச்சியாக வழிப்படுத்தப்பட வேண்டும் என்றும் தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

28 Apr, 2012
மரண அறிவித்தல்

மட்டுவில், சாவகச்சேரி, அரியாலை

15 Apr, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

England, United Kingdom, Bristol, United Kingdom

16 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, நியூஸ்லாந்து, New Zealand

15 Apr, 2014
மரண அறிவித்தல்

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Middelfart, Denmark

17 Mar, 2024
மரண அறிவித்தல்

புலோலி, Mönchengladbach, Germany

09 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கப்பூர், Singapore, கோப்பாய்

15 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Greenford, United Kingdom

13 May, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Songkhla, Thailand, Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், தெஹிவளை, London, United Kingdom

15 Mar, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், Witten, Germany

05 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, சித்தன்கேணி, சுவிஸ், Switzerland

19 Apr, 2021
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Toronto, Canada

12 Apr, 2024
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை, Wellington, New Zealand

11 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் உரும்பிராய் கிழக்கு, Jaffna, Oslo, Norway, உரும்பிராய் மேற்கு

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Ratingen, Germany

12 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கல்கிசை

14 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, சரவணை கிழக்கு, Caledon, Canada

14 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ரங்கூன், மியான்மர், Burma, அளவெட்டி, Scarborough, Canada

15 Apr, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, London, United Kingdom

16 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, நெதர்லாந்து, Netherlands, Liverpool, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, பருத்தித்துறை

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பனை, Eastham, United Kingdom, London, United Kingdom

15 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Village-Neuf, France

14 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, மானிப்பாய்

17 Mar, 2024
மரண அறிவித்தல்

Corbeil-Essonnes, France, Villabé, France

10 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Basel, Switzerland

09 Apr, 2024
மரண அறிவித்தல்

சாஸ்திரிகூளாங்குளம், ஒமந்தை, Osnabrück, Germany

10 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US