13 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு கூரல் : பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு

Sri Lankan Tamils Mullivaikal Remembrance Day Sri Lanka
By Jenitha May 15, 2022 10:02 PM GMT
Report

மே 18ஆம் திகதி மத்திய லண்டனில் ட்ரபால்கர் சதுக்கத்தில் மாலை 5:30 மணிக்கு தொடங்கும் 13ஆம் வருட முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு கூரல் நிகழ்வுக்கு பிரித்தானிய தமிழர் பேரவையினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

“வெற்றிகளை மட்டுமே பார்க்க விரும்பியவர்கள் விடுதலையின் பாதையில் வரும் பின்னடைவுகளை கண்டு துவண்டு விடுவர். பின் தங்கிடுவர். பாதைகள் மாறி திசை மாறி சென்றிடுவர். தற்காலிக வெளிச்சங்களை நோக்கி அகன்றிடுவர்.

ஆனால் தாம் வரித்துக்கொண்ட இலட்சியத்திற்காக எந்த இடர் நேரினும் போற்றுவார் போற்றினாலும் தூற்றுவோர் தூற்றினாலும் இலக்கு மட்டுமே நோக்கிடும் அர்ச்சுனனாக வாழ்வியல் இச்சைகளுக்கு அப்பால் அயராது செயல்படும் மாமனிதர்கள்தான் கடும் சூறாவளியில் தாக்குப் பிடித்து வெற்றியின் கரைக்கு அழைத்து செல்லும் மீகாமான்களாவர்.

18 மே 2009இற்குப் பின் இருந்த நிலை சற்று எம் கண் முன் வரட்டும். அதிர்ச்சியும், அயர்ச்சியும், கோபமும், பயமும், அவலமும், அவமானமுமாக, மரணமும், சிறை வாழ்க்கையுமாக, சுற்றியிருந்த இடமெல்லாம் நெருப்பும் புகையுமாக, கருக்கப்பட்ட உடலங்களும் நொறுக்கப்பட்ட கட்டடங்களுமாக, தாயகத்தின் உள்ளேயும் வெளியேயும் துரத்தி துரத்தி வேட்டையாடப்பட்ட விலங்குகளாக இருந்த தமிழினம் தொலை தூரத்து வெளிச்சத்தை தேடியது. அந்த நிலையிலும் கூட போர்க் குணமும் விடுதலை வேட்கையும் நேர்மையும் உறுதியும் புத்தாக்க சக்தியும் ஒரு சிலரிடமாவது தங்கியிருந்தது.

13 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு கூரல் : பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு | 13Th Anniversary Of The Mullivaikkal

ஒரு வழி தடுக்கப்பட்டால் புது வழி திறக்கும். அறிவும் ஆற்றலும் செயல் திறனும் உள்ளவர்கள் தளரா நம்பிக்கையுடன் ஒருங்கு திரண்டு எழுந்தது எம்மை ஒடுக்க நினைத்த எதிரிக்கு விழுந்த முதலடி. உலகின் முன்னே தமிழினத்தை பயங்கரவாதிகளாக பிரிவினைவாதிகளாக உருவகப்படுத்திய சிங்கள தேசம் இன்று கொடூர குற்றங்கள் புரிந்ததாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மாறாக தமிழினம் பாதிக்கப்பட்டவர்களாக ஒடுக்கப்பட்டவர்களாக எது வரினும் அயராது எழுந்து நீதிக்காக போராடும் இனமாக மதிக்கப்படுகிறது.

எம் மக்களே!

எம் விடுதலை போராட்டம் குரூரமாக சிதைக்கப்பட்டு 13 வருடங்களின் பின்னர் உலக ஒழுங்கில் ஒரு முக்கிய அமைவிடத்தில் பாரம்பரிய தாயகத்தை கொண்டிருக்கும் ஈழத் தமிழராகிய நாம் புறம் தள்ளி விட முடியாத ஒரு சக்தியாக இன்று எழுந்து வருகின்றோம். மாறாக சிங்கள தேசம் தன் நாளாந்த அத்தியாவசிய தேவைகளைக் கூட உலக நாடுகளிடம் யாசித்துப் பெற வேண்டி உள்ளது.

13 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு கூரல் : பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு | 13Th Anniversary Of The Mullivaikkal

இலங்கைத் தீவின் மக்கள் படும் அவலங்களை நாம் அனுதாபத்துடனேயே பார்க்கின்றோம். அடுத்தடுத்து வந்த அனைத்து ஆட்சியாளர்களும் தமிழ் மக்கள் மீது பெரும் போரினை கட்டமைத்து சிங்கள தேசம் எம்மை அழிவின் விளிம்பிற்கு தள்ளியது.

இதனை விட மோசமான பொருண்மிய தடைகள் எம் மீது ஏவி விடப்பட்டாலும் அதனை நேர்மையான திறமையான தலைமையுடன் வெற்றிகரமாக முறியடித்தோம். அனைத்து அதிகாரங்களையும் இறைமையுள்ள நாடு எனும் அங்கீகாரத்தையும் கொண்ட சிங்கள தேசம் செல்வழி தெரியாது தவிக்கின்றது.

மற்றுமொரு ஆட்சி மாற்றம் இலங்கைத் தீவின் பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை. தூர இருந்தே எம் மண்ணை அளவற்று நேசித்த புலம்பெயர் மக்களாகிய நாம் எடுத்த முன் முயற்சிகளும் உலக ஒழுங்கில் ஏற்பட்டு வரும் மாற்றங்களும் நீதிக்கும் உரிமைக்குமான எம் கோரிக்கைகளை இன்று முன் நோக்கித் தள்ளியுள்ளது.

சரியான நேரத்தில் சரியான வியூகங்களை வகுத்து நெறி முறையாக செயல்பட வேண்டிய நேரமிது. எதிரி நிலை குலைந்து சரிவை சந்திக்கும் இந்த நேரத்தில், கடந்த 70 ஆண்டுகளில் இலங்கை அனுபவிக்காத பெரும் பின்னடைவுகளை எதிர்கொள்ளும் வேளையில், எம் கரங்களை உறுதியாகப் பிணைத்து சாதுரியமாக நீதிக்கான பயணத்தை இன்னும் வேகமாக முன் நகர்த்தும் வேளை இது.

13 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு கூரல் : பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு | 13Th Anniversary Of The Mullivaikkal

உலகத் தமிழ் மக்களே! ஒன்றுபடுவோம்! செயல்படுவோம்!

எதிர்வரும் மே 18ஆம் திகதி மத்திய லண்டனில் ட்ரபால்கர் சதுக்கத்தில் மாலை 5:30 மணிக்கு தொடங்கும் 13ஆம் வருட முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு கூரல் நிகழ்வில் அனைவரும் ஒன்று திரண்டு இழந்த எம் மக்களுக்காக அஞ்சலி செலுத்துவதுடன் நீதிக்கான பயணத்தில் நம்பிக்கையுடன் செயல்படுவோமென உறுதி எடுப்போம்.

இந்த நிகழ்வில் “Continuing Cycles of Violence and Genocide in Sri Lanka" ஆவண திரைப்படம் உலகெங்கிலும் பார்க்கக் கூடியதாக வெளியிட்டு வைக்கப்படும்.

பூகோள ஒழுங்கு மாற்றங்களும் தமிழ் மக்கள் மீதான தாக்கங்களும் குறித்த கண்காட்சி ஒன்று இளையோர்களின் முன்னெடுப்பில் வருகை தருவோரின் பார்வைக்கு வைக்கப்படும். பிரித்தானிய மற்றும் உலக நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் உரையாற்ற உள்ளனர். முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்படும்.

சரியாக மாலை 6 மணி 18 நிமிடத்தில் (மே 18 18:18) அணைத்து மக்களும் இணைந்து ஒளி ஏற்றப்படும்.

ஒன்றுபடுவோம்! ஒடுக்கப்பட்ட எம் மக்களுக்காக உறுதி எடுப்போம்! நீதிக்கான பயணத்தை விரைவுபடுத்துவோம்!”

இடம் : Trafalgar Square, London WC2N 5DN,

திகதி : 18 May 2022, Wednesday

நேரம்: 5:30 PM

பிரித்தானிய தமிழர் பேரவை 

மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், தையிட்டி, வண்ணார்பண்ணை

14 Dec, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, புளியங்கூடல், வண்ணார்பண்ணை

11 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, கொழும்பு, London, United Kingdom

08 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, இந்தியா, British Indian Ocean Terr., தெஹிவளை

12 Dec, 2018
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு

24 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US