சீரற்ற வானிலை காரணமாக 133,280 பேர் பாதிப்பு
இலங்கையின் ஆறு மாவட்டங்களில் 31,990 குடும்பங்களைச் சேர்ந்த குறைந்தது 133,280 பேர் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் மூன்று இறப்புகளும் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய மையம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் நுவரெலியா, இரத்தினபுரி , புத்தளம், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய ஆறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.
பல நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளில் நீர் நிலைகள் வேகமாக அதிகரித்து வருகிறது.இடைவிடாத மழை காரணமாக சில நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன.
களனி, களுகங்கை, மஹா ஓயா, அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும், கொழும்பு, காலி, களுத்துறை, ரத்தினபுரி,மாத்தறை மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் நிலவும் மழை நிலை இன்றிரவு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ , வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேற்கு, சபரகமுவா மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை
மாவட்டங்களின் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான கனமான வீழ்ச்சியை
எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.