கடந்த வாரத்தில் பதிவாகிய 1217 கோவிட் இறப்புகள்
இலங்கையில் கோவிட் தாக்கம் ஆரம்பித்ததன் பின்னர், அதிக இறப்புக்கள், கடந்த வாரத்தில் பதிவாகியுள்ளன.
இதன்படி கடந்த வாரத்தில் 1217 கோவிட் இறப்புகள் பதிவானதாகச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதேநேரம் கடந்த வாரத்தில் மாத்திரம் 27ஆயிரத்து 59 தொற்றாளர்கள் பதிவாகினர். இதில் ஒரு நாள் இறப்பு எண்ணிக்கையாக நேற்று 212 இறப்புகள் நிகழ்ந்தன. 4,582 கோவிட் தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர்.
இதற்கிடையில் நேற்று வரை மொத்த கோவிட் இறப்புகள் 8,000 ஐத் தாண்டி 8,583 ஆக அதிகரித்தன. இந்த வார ஆரம்பத்தில் நாளாந்த இறப்பு எண்ணிக்கை 190 மற்றும் 198 க்கு இடையிலிருந்தது. அது புதன்கிழமை 200 ஐ தாண்டியது.
புதன்கிழமை இறப்பு எண்ணிக்கை 209 ஆகவும் வியாழக்கிழமை இறப்பு எண்ணிக்கை 214 ஆகவும் இருந்தது.
கோவிட் டின் இதுவரையான காலப்பகுதியில், கடந்த வியாழக்கிழமை 4,602 இந்த வாரம் அதிக எண்ணிக்கையிலான கோவிட் தொற்றுகள் பதிவாகின.