போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்ட ஈரான் - இஸ்ரேல்! ட்ரம்ப் விடுத்துள்ள அறிவிப்பு
இஸ்ரேலும் ஈரானும் முழுமையான மற்றும் நிரந்தரமான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இந்த முடிவு போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சமூக ஊடக பதிவில் ட்ரம்ப் குறிப்பிடுகையில்,
12 நாட்கள் மோதல்
“இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகியவை முழுமையான மற்றும் மொத்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டது.
இந்தப் போர் நிறுத்தம் ஆறு மணி நேரத்திற்குள் தொடங்கி, 12 மணி நேரம் நீடிக்கும். மேலும், ஈரான் முதலில் தனது போர் நிறுத்த நடவடிக்கையை தொடங்கி, 12 மணி நேரத்திற்குப் பின் இஸ்ரேல் போர் நிறுத்த இனக்கப்பாட்டுக்கு வகைத்தரும்.
இதன் மூலம், 24 மணி நேரத்தில் 12 நாட்கள் இடம்பெற்ற இந்த மோதல் முடிவுக்கு வரும்.
இருப்பினும், இஸ்ரேல் மற்றும் ஈரான் இதுவரை இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தவில்லை. மேலும் ஈரானிய அரசு ஊடகங்கள், நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தாலும், உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனியின் இறுதி ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கின்றன.