ஈரானால் அதிர்ந்த கட்டார் - ஈராக் தளங்கள்! அமெரிக்காவின் நகர்வை உற்றுநோக்கும் சர்வதேசம்
கட்டார் - ஈராக்கில் இடம்பெற்ற ஈரானின் தாக்குதல் தொர்பில் அமெரிக்க ஜனாதிபதி தற்போது வெள்ளை மாளிகையின் பேச்சுவார்த்தை அறையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது தேசிய பாதுகாப்பு விளக்கவுரை ஓவல் அலுவலகத்தில் திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் அமெரிக்க தளங்கள் மீதான தாக்குதல்கள் காரணமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், கட்டார் மீதான தாக்குதல்களை ட்ரம்ப் கண்காணித்து வருகிறார் எனவும் கூறப்படுகிறது.
அல் உதெய்த் தளம்
தாக்குதல்கள் நடக்கும் என்பது அமெரிக்காவிற்கு முன்கூட்டியே தெரியும் என்றும், முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது என்பதையும் நாங்கள் அறிவோம் எனவும் அமெரிக்க தரப்புகள் கூறியுள்ளன.
இதன் காரணமாக, கட்டார் வெளியுறவு அமைச்சகத்தைப் போலவே, அல் உதெய்தில் உள்ள பொதுமக்களுக்கும் பணியாளர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அமெரிக்க தரப்புகள் கூறியுள்ளன.
இந்நிலையில் அமெரிக்கத் தாக்குதலைப் பிரதிபலிக்கும் வகையில், விமானப்படைத் தளத்தின் மீதான ஈரானியத் தாக்குதல், பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அளவீடு செய்யப்பட்டதாகத் தெரிகிறது என்று வெள்ளை மாளிகையின் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
இதற்கமைய அமெரிக்க நிர்வாகம் அடுத்து என்ன நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என்பதை சர்வதேசம் உற்றுநோக்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
