மஹர சிறையில் கொல்லப்பட்ட 11 கைதிகள்: குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விசேட உத்தரவு

Sri Lanka Sri Lanka Police Investigation Law and Order
By Dharu Oct 17, 2024 04:19 AM GMT
Report

மஹர சிறைச்சாலைக்குள் 2020 நவம்பரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் 11 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக குறித்த வழக்கானது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் செயற்பாடு குற்றம் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில்  மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் குற்றம் எனவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் எனவும் வெலிசர நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னணியில் சட்டமா அதிபரால் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

13 நாட்களில் அரசாங்கம் 41900 கோடி ரூபா கடன்

13 நாட்களில் அரசாங்கம் 41900 கோடி ரூபா கடன்

வழக்கை பரிசீலித்த நீதவான்

மஹர சிறைச்சாலையில் உள்ள கைதிகள், தமக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை PCR பரிசோதனைக்கு உட்படுத்துமாறும், கோவிட் தொற்றுக்குள்ளான கைதிகளை உரிய சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்புமாறும் கோரியே இந்த போராட்டத்தை 2020 நவம்பரில் முன்னெடுத்துள்ளனர்.

மஹர சிறையில் கொல்லப்பட்ட 11 கைதிகள்: குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விசேட உத்தரவு | 11 Inmates Shot Dead At Mahara Jail

அங்கு சிறை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 கைதிகள் உயிரிழந்தனர்.

எனினும், வழக்கை பரிசீலித்த நீதவான் துசித தம்மிக்க உதிவவிதான, மஹர சிறைச்சாலையில் 11 கைதிகள் கொல்லப்பட்டமை குற்றம் என தீர்ப்பளித்தார்.

கலவரத்தை அடக்குவதற்கு குறைந்தபட்ச பலத்தை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களை சட்டமா அதிபருக்கு பாதுகாப்பு தரப்பு முன்வைத்த போதிலும், இறந்த கைதிகள் சுடப்பட்ட விதம் கலவரத்தை அடக்குவதற்காகவோ அல்லது மனிதாபிமானத்திற்காகவோ சுட்டதாகத் தெரியவில்லை என்று நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்தபட்ச சக்தியாக முழங்காலுக்குக் கீழே இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் பாதுகாப்பு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட போதிலும், இறந்த 11 கைதிகளும் தலை, வயிறு, மார்பு போன்ற இடங்களில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர் என்பதை பிரேத பரிசோதனை அறிக்கையை மேற்கோள்காட்டி நீதவான் தனது தீர்ப்பில் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.

பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை பதிவு செய்வதில் எழுந்துள்ள சிக்கல்!

பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை பதிவு செய்வதில் எழுந்துள்ள சிக்கல்!

குற்றப் புலனாய்வுப் பிரிவு

இதன்படி, மஹர சிறைச்சாலையில் கைதிகள் கொல்லப்பட்டமை குற்றம் என தீர்மானித்த நீதவான், குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் தொடர்புடைய சிறைச்சாலை மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அனைவரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டார்.

மஹர சிறையில் கொல்லப்பட்ட 11 கைதிகள்: குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விசேட உத்தரவு | 11 Inmates Shot Dead At Mahara Jail

எவ்வாறாயினும், நீதிமன்றம் இவ்வாறானதொரு உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில், மஹர சிறைச்சாலையில் 11 கைதிகள் உயிரிழந்தமை தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கடந்த ஓகஸ்ட் 30ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிபிரியா ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில், “மஹர சிறைச்சாலை சம்பவத்தின் போது சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் சீரான முறையில் செயற்பட்டதை அவதானிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட பாதுகாப்ப்பு என்ற பெயரில் கைதிகளின் உரிமை இதில் மீறப்பட்டுள்ளது என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மஹர சிறைச்சாலை படுகொலை சாட்சிகள் சிறைக்குள் சித்திரவதை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு

மஹர சிறைச்சாலை படுகொலை சாட்சிகள் சிறைக்குள் சித்திரவதை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு

மஹர சிறைச்சாலை படுகொலை சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

மஹர சிறைச்சாலை படுகொலை சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

மரண பீதியினால் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலகம்!அறிக்கை சமர்ப்பிப்பு

மரண பீதியினால் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலகம்!அறிக்கை சமர்ப்பிப்பு

மஹர சிறைச்சாலை அதிகாரிகள் மட்டுமே கைதிகளை சுட்டுக்கொன்றுள்ளனர்

மஹர சிறைச்சாலை அதிகாரிகள் மட்டுமே கைதிகளை சுட்டுக்கொன்றுள்ளனர்

மஹர சிறைச்சாலையில் உயிரிழந்த மேலும் 4 கைதிகளை தகனம் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

மஹர சிறைச்சாலையில் உயிரிழந்த மேலும் 4 கைதிகளை தகனம் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

மஹர படுகொலையின் நேரில் கண்ட சாட்சிகளை சித்திரவதை செய்வதாக குற்றச்சாட்டு

மஹர படுகொலையின் நேரில் கண்ட சாட்சிகளை சித்திரவதை செய்வதாக குற்றச்சாட்டு

3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அளவெட்டி, London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கிளிநொச்சி

02 Jun, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

07 May, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நீர்வேலி, Toronto, Canada

31 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, Scarborough, Canada

04 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, மாமடுசந்தி, வவுனியா, Mississauga, Canada

01 Jun, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

02 Jun, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுப்பிட்டி, Toronto, Canada

05 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

06 Jun, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்

நாரந்தனை, நீர்கொழும்பு

02 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு

02 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, தெஹிவளை

04 Jun, 2024
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

Atchuvely, கொழும்பு, Mississauga, Canada

27 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US