மஹர சிறையில் கொல்லப்பட்ட 11 கைதிகள்: குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விசேட உத்தரவு

Sri Lanka Sri Lanka Police Investigation Law and Order
By Dharu Oct 17, 2024 04:19 AM GMT
Report

மஹர சிறைச்சாலைக்குள் 2020 நவம்பரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் 11 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக குறித்த வழக்கானது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் செயற்பாடு குற்றம் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில்  மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் குற்றம் எனவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் எனவும் வெலிசர நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னணியில் சட்டமா அதிபரால் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

13 நாட்களில் அரசாங்கம் 41900 கோடி ரூபா கடன்

13 நாட்களில் அரசாங்கம் 41900 கோடி ரூபா கடன்

வழக்கை பரிசீலித்த நீதவான்

மஹர சிறைச்சாலையில் உள்ள கைதிகள், தமக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை PCR பரிசோதனைக்கு உட்படுத்துமாறும், கோவிட் தொற்றுக்குள்ளான கைதிகளை உரிய சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்புமாறும் கோரியே இந்த போராட்டத்தை 2020 நவம்பரில் முன்னெடுத்துள்ளனர்.

மஹர சிறையில் கொல்லப்பட்ட 11 கைதிகள்: குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விசேட உத்தரவு | 11 Inmates Shot Dead At Mahara Jail

அங்கு சிறை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 கைதிகள் உயிரிழந்தனர்.

எனினும், வழக்கை பரிசீலித்த நீதவான் துசித தம்மிக்க உதிவவிதான, மஹர சிறைச்சாலையில் 11 கைதிகள் கொல்லப்பட்டமை குற்றம் என தீர்ப்பளித்தார்.

கலவரத்தை அடக்குவதற்கு குறைந்தபட்ச பலத்தை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களை சட்டமா அதிபருக்கு பாதுகாப்பு தரப்பு முன்வைத்த போதிலும், இறந்த கைதிகள் சுடப்பட்ட விதம் கலவரத்தை அடக்குவதற்காகவோ அல்லது மனிதாபிமானத்திற்காகவோ சுட்டதாகத் தெரியவில்லை என்று நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்தபட்ச சக்தியாக முழங்காலுக்குக் கீழே இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் பாதுகாப்பு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட போதிலும், இறந்த 11 கைதிகளும் தலை, வயிறு, மார்பு போன்ற இடங்களில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர் என்பதை பிரேத பரிசோதனை அறிக்கையை மேற்கோள்காட்டி நீதவான் தனது தீர்ப்பில் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.

பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை பதிவு செய்வதில் எழுந்துள்ள சிக்கல்!

பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை பதிவு செய்வதில் எழுந்துள்ள சிக்கல்!

குற்றப் புலனாய்வுப் பிரிவு

இதன்படி, மஹர சிறைச்சாலையில் கைதிகள் கொல்லப்பட்டமை குற்றம் என தீர்மானித்த நீதவான், குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் தொடர்புடைய சிறைச்சாலை மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அனைவரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டார்.

மஹர சிறையில் கொல்லப்பட்ட 11 கைதிகள்: குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விசேட உத்தரவு | 11 Inmates Shot Dead At Mahara Jail

எவ்வாறாயினும், நீதிமன்றம் இவ்வாறானதொரு உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில், மஹர சிறைச்சாலையில் 11 கைதிகள் உயிரிழந்தமை தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கடந்த ஓகஸ்ட் 30ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிபிரியா ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில், “மஹர சிறைச்சாலை சம்பவத்தின் போது சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் சீரான முறையில் செயற்பட்டதை அவதானிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட பாதுகாப்ப்பு என்ற பெயரில் கைதிகளின் உரிமை இதில் மீறப்பட்டுள்ளது என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மஹர சிறைச்சாலை படுகொலை சாட்சிகள் சிறைக்குள் சித்திரவதை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு

மஹர சிறைச்சாலை படுகொலை சாட்சிகள் சிறைக்குள் சித்திரவதை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு

மஹர சிறைச்சாலை படுகொலை சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

மஹர சிறைச்சாலை படுகொலை சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

மரண பீதியினால் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலகம்!அறிக்கை சமர்ப்பிப்பு

மரண பீதியினால் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலகம்!அறிக்கை சமர்ப்பிப்பு

மஹர சிறைச்சாலை அதிகாரிகள் மட்டுமே கைதிகளை சுட்டுக்கொன்றுள்ளனர்

மஹர சிறைச்சாலை அதிகாரிகள் மட்டுமே கைதிகளை சுட்டுக்கொன்றுள்ளனர்

மஹர சிறைச்சாலையில் உயிரிழந்த மேலும் 4 கைதிகளை தகனம் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

மஹர சிறைச்சாலையில் உயிரிழந்த மேலும் 4 கைதிகளை தகனம் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

மஹர படுகொலையின் நேரில் கண்ட சாட்சிகளை சித்திரவதை செய்வதாக குற்றச்சாட்டு

மஹர படுகொலையின் நேரில் கண்ட சாட்சிகளை சித்திரவதை செய்வதாக குற்றச்சாட்டு

மரண அறிவித்தல்

தங்கோடை காரைநகர், Scarborough, Canada

09 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, திருவையாறு

10 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், நாவாந்துறை, Bergen, Norway

11 May, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US