மஹர சிறைச்சாலை அதிகாரிகள் மட்டுமே கைதிகளை சுட்டுக்கொன்றுள்ளனர்
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது கைதிகளை சிறை அதிகாரிகள் மட்டுமே சுட்டுக் கொன்றுள்ளதாக இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர் டி சில்வா தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலையில் கைதிகள் அதிகமாக இருப்பது, கொரோனா குறித்த அச்சம் மற்றும் வழங்கப்படும் உணவின் தரம் குறைவாக இருப்பதும் இந்த சம்பவத்திற்கு காரணமாக அமைந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர் டி சில்வா,
சிறைச்சாலையில் காணப்படும் இடநெருக்கடி இதற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் அச்சம், தரமற்ற உணவு வழங்கப்பட்டமை என்பது இதற்கு காரணம்.
சில நேரங்களில் கறி சொதிகளில் தண்ணீர் கலந்து பரிமாற்றப்பட்டுள்ளது. கைதிகள் நிலைமையை விளக்கி அதிகாரிகளுடன் கலந்துரையாட சென்ற போது பிரச்சினை அதிகரித்துள்ளது.
இதன் போது தம்முடன் முரண்பாடுகள் இருக்கும் கைதிகள் தம்மை சந்தித்தால் கைதிகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
சில கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனைக்குள் நுழைந்து, மாத்திரைகளை எடுத்து, குடித்தவுடன் மற்றவர்களுக்கும் வழங்கினர் என்பதற்கான சாட்சியங்கள் மூலமான ஆதாரங்கள் இருக்கின்றன. இதன் காரணமாக கைதிகள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
11 கைதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சிறை அதிகாரிகள் மட்டுமே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். தடயவியல் பரிசோதனை, பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் கைதிகளின் சாட்சியங்கள் மூலமே இந்த துப்பாக்கிச் சூடு சட்டத்தின் உட்பட்டு நடத்தப்பட்டதா என்பது குறித்த முடிவுக்கு வர முடியும் எனவும் யு.ஆர் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 12 மணி நேரம் முன்

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam
