மஹர சிறைச்சாலை படுகொலை சாட்சிகள் சிறைக்குள் சித்திரவதை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு
பதினொரு பேர் கொல்லப்பட்டு, 100ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த மஹர சிறைச்சாலையில் நடந்த படுகொலை சாட்சிகள், சிறைச்சாலைக்குள் சித்திரவதை செய்யப்படுவதாக கைதிகளின் உரிமைகளுக்காக செயற்படும் முன்னணி குழு ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது.
சாட்சிகள் கொலைகாரர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.
இந்த ஆதாரங்களை எப்படியாவது மறைக்க அவர்கள் கடுமையாக முயற்சி செய்வார்கள் என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மஹர சிறைச்சாலையின் "கொலைகார" அதிகாரிகளை வேறொரு சிறைக்கு மாற்றி, ஆதாரங்களை பாதுகாக்குமாறு துறைக்குப் பொறுப்பான அமைச்சரிடம் கோரிக்கை விடுப்பதாக, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பொதுச் செயலாளர் சுதேஷ் நந்திமல் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
மஹர சிறைக் கலவரத்தை நேரில் கண்ட சாட்சிகளுக்கு சரியான உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படவில்லை எனவும், சுதேஷ் நந்திமல் சில்வா குற்றம் சாட்டியுள்ளதோடு, அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளார்.
நவம்பர் 29ஆம் திகதி மஹர சிறைச்சாலையில் நடந்த படுகொலையில் கொல்லப்பட்ட 11 பேரில் 8 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்திருப்பது நீதிமன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, தகனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
உடல்களை அடையாளம் கண்ட பல உறவினர்கள், தமது அன்புக்குரியவர்களில் மூன்று அல்லது நான்கு பேர் மார்பில் காயத்தைக் கண்டதாகக் கூறியுள்ளதாக, இலங்கை ஜனநாயகத்திற்கான ஊடகவிலாளர்கள் அமைப்பிடம் தெரிவித்துள்ளனர்.
ரமிந்து சுலக்சன, ரொட்ரிகோ, பிரதீப் அதுல குமார, எருவ்வல அவந்த குமார, இந்திக புஷ்பகுமார, அமித் சுபசிங்க, சம்பத் புஷ்பகுமார, ரசிக ஹர்ஷன காரியவாசம் மற்றும் மாலன் கிரெய்க் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட கைதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பிரேத பரிசோதனைகள் ஊடாக தெரியவந்துள்ளது.
மேலும் மூன்று பேரின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் அடுத்த வருடம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
