தமிழக கடற்தொழிலாளர்கள் 10 பேர் கைது
இலங்கைகடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்ட தமிழக கடற்தொழிலாளர்கள் 10 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் - தூத்துக்குடியில் இருந்து வருகை தந்ந கடற்தொழிலாளர்கள் முல்லைத்தீவுக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளை இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்லை தாண்டிய மீன்பிடி
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள 10 கடற்தொழிலாளர்களையும் அவர்களது விசைப் படகையும் திருகோணமலைத் துறைமுகத்துக்குக் கடற்படையினர் கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் கைது செய்யப்பட்டுள்ள 10 கடற்தொழிலாளர்கள் திருகோணமலை நீதவான்
முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.