நாட்டில் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த 10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
நாட்டில் உணவு பாதுகாப்பு செயற்றிட்டத்தை வலுப்படுத்த பத்தாயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீட்டிலான செயற்திட்டமொன்றை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒருங்கிணைந்த நீர்வழங்கல், நீர்வள முகாமைத்துவ திட்டம் மற்றும் காலநிலை பாதிப்பு குறைப்பு திட்டத்தின் (IWWRMP மற்றும் CResMPA) கீழ் திட்ட முன்னுரிமை திட்டமொன்று நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது.
நீர்ப்பாசனம், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில் அதற்கான முன்னெடுப்புகள் நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

உணவுப் பாதுகாப்பு செயற்றிட்டம்
இந்த செயற்றிட்டத்தின் நிறைவில் நாட்டின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், 25 மாவட்டங்களுக்கும் கிட்டத்தட்ட 10,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கி நீர்ப்பாசன முறை பலப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் இல்லை, அசுரன் படத்தில் நான் நடித்திருக்கனும், விட்டுக்கொடுத்துட்டேன்.. சொன்னது யார் பாருங்க Cineulagam
தலைநகரம் பாதுகாப்பாக இல்லை! லண்டனுக்கு இராணுவத்தை அனுப்ப வேண்டிய நேரமிது - நாதிம் ஜஹாவி News Lankasri
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan