வாக்களிப்பதைத் தவிர்த்து கொழும்பில் தங்கியிருந்த 10 லட்சம் வாக்காளர்கள்
கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது வேறுபிரதேசங்களைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் வாக்காளர்கள், வாக்களிப்பதைத் தவிர்த்துவிட்டு கொழும்பில் தங்கியிருந்துள்ளனர்.
கொழும்பு மற்றும் புறநகர் பிரதேசங்களில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுவருகின்றவர்களில் பெரும்பாலானவர்களே இவ்வாறு வாக்களிப்பைப் புறக்கணித்து கொழும்பில் தங்கியிருந்துள்ளனர்.
வாக்களிப்பு வீதம்
நடந்து முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இந்நாட்டின் தீர்மானமிக்க தேர்தல் அல்லாமை, அரசியல் மற்றும் தேர்தல் முறைமையின் மீது நம்பிக்கையின்மை, விரக்தி, வாக்களிப்பதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான செலவைத் தாங்க முடியாமை, இந்தத் தேர்தல் தொடர்பில் போதிய அறிவின்மை மற்றும் தொடர்ந்து பல தேர்தல்கள் நடந்தமை போன்ற காரணங்களால், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இருந்து சுமார் 10 இலட்சம் பேர் வாக்களிக்கச் செல்லவில்லை என்று, தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக முன்னைய தேர்தல்களை விட உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பு வீதமும் குறைவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam