இந்தியாவில் பரவும் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்தான Zika வைரஸ்
மனித மூளையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்தான Zika வைரஸ் இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் பரவியுள்ளது. இந்த மாநிலம் இந்தியாவில் அதிக சனத் தொகை கொண்ட மாநிலமாகும்.
உத்தர பிரதேசத்தில் 17 பிள்ளைகள் உட்பட 89 பேருக்கு இந்த வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பிரதான நகரமான நாக்பூரின் நிலைமை மோசமாகி வருவதாக நாக்பூர் மாவட்ட பிரதான வைத்திய அதிகாரி நேபாள் சிங் தெரிவித்துள்ளார்.
இதனை தவிர Zika வைரஸ் தொற்றுக்கு உள்ளான 14 பேர் கேரளா மாநிலத்தில் கடந்த செப்டம்பர் மாதம் அடையாளம் காணப்பட்டனர்.
Zika வைரஸ் முதல் முறையாக இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.
நுளம்பு வகை ஒன்றின் மூலம் பரவும் இந்த Zika வைரஸ் பிள்ளைகளின் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன் உடல் ரீதியான பலவீனங்களை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Zika வைரஸ் தொற்றிய பின்னர் மூளை சுருங்குவதுடன் தலையின் அளவு சிறிதாக மாறும் என கண்டறியப்பட்டுள்ளது.
நுளம்புகள் மூலம் இந்த வைரஸ் பரவும் அதேவேளை பாலியல் தொடர்புகள் மூலம் பரவக் கூடும் என கண்டறியப்பட்டுள்ளது.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 3 மணி நேரம் முன்

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்படிபட்டவர்கள்... சீமான் பரபரப்பு பேச்சு Cineulagam

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri

6 வயது பிரித்தானிய சிறுவனின் சூட்கேஸில் மர்ம பொருள்: விமான நிலையத்தில் நடந்த தேடுதல் வேட்டை News Lankasri

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri
