ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கு உறுதியான ஆதரவு தொடரும்: பர்ன்ஹாம் உறுதி
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கிக்கு தாம் "துணையாக இருப்பேன்" என்றும், தனது பிரதமரின் கீழ் உக்ரைனுக்கான பிரித்தானியாவின் ஆதரவு "உறுதியாக" தொடரும் என்றும் பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார்.
பதவியேற்ற பிறகு தாம் பேசவிருக்கும் முதல் சில வெளிநாட்டுத் தலைவர்களில் ஜனாதிபதி ஸெலென்ஸ்கியும் ஒருவராக இருப்பார் என்று அவர் கூறினார்.
மேலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனும் ஆரம்பத்திலேயே தொலைபேசி வாயிலாக உரையாட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆதரவு
"இவைதான் எனது முதல் அழைப்புகளாக இருக்கும். பிரித்தானியாவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்பதை இன்று பிற்பகுதியில் ஜனாதிபதி ஸெலென்ஸ்கியிடம் நான் மிகத் தெளிவாகத் தெரிவிப்பேன்," என்று அவர் கூறினார்.
அவர் மேலும் பேசுகையில், "கீர் ஸ்டார்மர் உக்ரைனை ஆதரித்ததுடன் மட்டுமின்றி, தனிப்பட்ட முறையிலும் துணையாக நின்று ஒரு நம்பமுடியாத பணியைச் செய்துள்ளார்.

அவரைப் போலவே நானும் 100 சதவீதம் ஸெலென்ஸ்கிக்கு துணையாக இருப்பேன். அரசாங்கத்தில் பர்ன்ஹாமிற்கு வெளியுறவுக் கொள்கை சார்ந்த அனுபவம் குறைவாகவே உள்ளது.
இருப்பினும், தாம் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியை நிர்வகித்தபோது, உக்ரைனிய மேயர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.