கோப்பாய் பொலிஸ் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கை
யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்ட பல இடங்களில் “யுக்திய” நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சோதனை நடவடிக்கைகள், இன்றையதினம் (26.03.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி. வெதகெதர மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையப் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.எம்.ஜீ ஹேரத் ஆகியோர் இதற்கு தலைமை தாங்கியுள்ளனர்.
விழிப்புணர்வு செயற்பாடுகள்
இதன்போது, பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான
செயற்பாடுகள் பேற்கொள்ளப்பட்டதுடன், வாகனங்களில் “யுக்திய” விழிப்புணர்வு
ஸ்டிக்கர்களும் பொலிஸாரால் ஒட்டப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |