வவுனியாவில் இளைஞர்கள் மேற்கொண்ட நடவடிக்கை
வவுனியா - பாலமோட்டை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களால் கசிப்பு பெரல் ஒன்று கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
பாலமோட்டை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்குளம் கிராமத்தில் தொடர்ச்சியாக கசிப்பு விற்பனை நடைபெற்று வந்துள்ளது.
இந்த நிலையில், பாலமோட்டை இளைஞர்கள் தங்கள் முயற்சியால் நேற்று இரவு கசிப்பு பெரல் ஒன்றைக் கைப்பற்றி அழித்துள்ளனர்.
பனிச்சங்குளம் ஆத்துக்காணி என்ற பகுதியில் கசிப்பு காய்ச்சுவதற்குத் தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு பெரல் 'கோடா' கிராமத்து இளைஞர்களால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் கசிப்பு காய்ச்சுவதற்குத் தயாராக இருந்த நபர்கள் கிராமத்து
தம்மை பார்த்ததும் தப்பி ஓடியதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.


