கத்தியால் குத்தப்பட்டு இளைஞர் படுகொலை!
கத்தியால் குத்தப்பட்டு இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் கேகாலை - புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் நேற்று(31) இடம்பெற்றுள்ளது.
கேகாலை, எந்துராபொல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வாக்குவாதம்
மேற்படி இளைஞர் தனது வீட்டினுள் உள்ள ஒலிப்பேழையை அதிக சத்தத்துடன் இயக்கியபோது அயல் வீட்டில் வசிக்கும் நபர் ஒருவர், ஒலிப்பேழையின் சத்தத்தைக் குறைக்குமாறு இளைஞரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் எல்லை மீறியதால் அயல் வீட்டில் வசிக்கும் நபர், இளைஞரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் 76 வயதுடைய அயல் வீட்டில் வசிக்கும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புலத்கொஹுபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
புடின் - ட்ரம்ப் சந்திப்பு தேவை இல்லை... உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா முன்வைக்கும் யோசனை News Lankasri
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam