மல்லாவியில் நாட்டு துப்பாக்கி வெடித்து இளைஞர் படுகாயம்
சட்டவிரோதமாக உடமையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இளைஞர் ஒருவர் கடுமையாக காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (06.03.2026) பிற்பகல் மல்லாவி ஒட்டறுத்தகுளம் வடகாடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மாங்குளம் பொலிஸார்
சம்பவத்தில் ஒட்டறுத்தகுளம் வடகாடு பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஆறுமுகம் சகிதன் என்ற இளைஞரே படுகாயமடைந்துள்ளார்.

சட்டவிரோதமாக தனது உடமையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி தவறுதலாக வெடித்ததன் காரணமாக அவர் கடுமையாக காயமடைந்ததாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த இளைஞர் உடனடியாக மல்லாவி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 12 மணி நேரம் முன்
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri