யாழில் காணாமல் போன இளைஞன்: உறவினர்கள் முறைப்பாடு
யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவரைக் காணவில்லை என அவரது
உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 26ஆம் திகதி வியாழக்கிழமை மதியத்திலிருந்து குறித்த இளைஞன் காணாமல் போய் உள்ளதாக அவரது உறவினர்களின் முறைப்பாட்டிலிருந்து தெரியவந்துள்ளது.
அதேவேளை, இளைஞர் காணாமல் போன தினத்தில் மஞ்சள் நிற மேற்சட்டை மற்றும் கறுப்பு நிற அரைக்காற்சட்டை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறவினர்கள் கோரிக்கை
இவரைப் பற்றிய தகவல் அறிந்தாலோ அல்லது இவரை எங்காவது கண்டாலோ சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 772690673 அல்லது 0776523229 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |