வவுனியாவில் பாம்பு கடித்து இளைஞன் மரணம்
வவுனியா (Vavuniya) வடக்கு- நெடுங்கேணி பகுதியில் பாம்பு கடித்து இளைஞன் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
இந்த சம்பவமானது பட்டிக்குடியிருப்பில் இன்று (27) காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில், குறித்த பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரணம்
குறித்த நபர் பாம்பு கடிக்கு உள்ளாகிய நிலையில் நெடுங்கணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட போது மரணமடைந்துள்ளர்.
தற்போது சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தையடுத்து பாம்பு மற்றும் விச பூச்சிகள் நீரில் அகப்பட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளதால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri
