வவுனியாவில் பாம்பு கடித்து இளைஞன் மரணம்
வவுனியா (Vavuniya) வடக்கு- நெடுங்கேணி பகுதியில் பாம்பு கடித்து இளைஞன் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
இந்த சம்பவமானது பட்டிக்குடியிருப்பில் இன்று (27) காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில், குறித்த பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரணம்
குறித்த நபர் பாம்பு கடிக்கு உள்ளாகிய நிலையில் நெடுங்கணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட போது மரணமடைந்துள்ளர்.
தற்போது சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தையடுத்து பாம்பு மற்றும் விச பூச்சிகள் நீரில் அகப்பட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளதால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 9 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam